Wednesday, October 29, 2008

சுப்பராயலு ரெட்டியார்

திவான்பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார்
முதல் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் படையில் இந்தியர்கள் பெருமளவில் சேர்ந்து, வீரப்போர் புரிந்தனர். இதனால் தேர்தல் நடத்தி, இந்தியர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வெள்ளையர்கள் முடிவு செய்தனர்.

1919_ம் ஆண்டு நவம்பர் மாதம் 30_ந்தேதி, தமிழ்நாட்டுடன் ஆந்திராவும் இணைந்திருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் முதலாவது தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) போட்டியிட்டது. காங்கிரசின் உள் பிரிவாக அன்னி பெசண்ட் அம்மை யார் தலைமையில் இயங்கிய "ஹோம் ரூல்" இயக்கம், நீதிக்கட்சியை எதிர்த்து நின்றது.

(நீதிக்கட்சி என்பது, முற்றிலும் பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட அமைப்பாகும் "வெள்ளுடை வேந்தர்" என்று புகழ் பெற்ற சர்.பிட்டி தியாகராயர் இக்கட்சியை அமைத்தார்.)

1919_ல் நடந்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதல்_அமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி, வெள்ளுடை வேந்தரை அனைவரும் கேட்டுக்கொண்டும், அவர் மறுத்துவிட்டார். எனவே, திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் முதல்_அமைச்சரானார்.

சில மாதங்களுக்குப்பின், சுப்பராயலு ரெட்டியார் மரணம் அடைந்தார். அவருக்கு பதிலாக, பனகல் அரசர் முதல்_அமைச்சரானார்.

Friday, October 24, 2008

மகாகவி பாரதி

மகாகவி பாரதி பாடல்கள்

விடுதலை! விடுதலை! விடுதலை!
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2


Thursday, October 23, 2008

பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி

காமராஜர் ஆட்சியும் வளமிக்க தமிழகமும்
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் தமிழகம் வளமிக்க மாநிலமாக பொற்கால ஆட்சி நடந்ததற்கு சில நற்சான்றுகளாய் விளங்கும் சாதனைகள்

கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்
அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.
காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.
தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்
கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.
தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம்.
உதகையில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை.பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்
சிமெண்ட் தொழிற்சாலைகள்.
மேட்டூர் காகித தொழிற்சாலை.
கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை
சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.
சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.
மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.
அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.
தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர், செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.
15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.
18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.
471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.
தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.
6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.
தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்
இவை போக ஏராளமான சிறு,குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன.

மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில்தான் இருந்தது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

தமிழ்நாடு அரசு சின்னம்!
தமிழ்நாடு அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் இருக்கிறது. இது எப்படி வந்தது? இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்ற தனித்தனி மாநிலங்கள் இல்லை. இவற்றின் சில பகுதிகள் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது மாகாண முதல்வராக இருந்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் அரசு நிர்வாக நோக்கத்திற்காக சென்னை மாகாணத்திற்கு என்று தனியாக ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
கோபுரம் சின்னத்தைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமர் நேரு மத்திய அமைச்சரவையுடன் ஆலோசித்தார். அவர்கள், மதச் சார்பற்ற நம்நாடு ஒரு மதச் சின்னத்தை, “இலச்சினை’யாக அனுமதிக்கக் கூடாது என்றனர். நேருவும் அனுமதி மறுத்து விட்டார்.
உடனே நேருவுக்கு கடிதம் எழுதி, “கோபுரம் மதச் சின்னமல்ல; தமிழக கட்டடக் கலைக்கு உரிய சிறப்பு கோபுரத்திற்கே உண்டு. மகாத்மாவின் நண்பரும் கிறிஸ்தவ பாதிரியாருமான ஆண்ட்ரூஸ், தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் கட்டிய மாதாகோவில் கூட இந்துமத கோபுர வடிவில் தான் அமைக்கப்பட்டது!’http://tambaramsivaraman என்று விளக்கினார் ஓமந்தூரார். அதன் பிறகு நேருவும் அனுமதி கொடுத்தார்.
மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.