Saturday, December 17, 2011

வள்ளலார்

உண்மையை அறிந்து கொள்ளுங்கள் !

நாம் வாழும் வாழ்க்கை முழுவதும் சமய மதம் சாதியின் அடிப்படையில்தான் வாழ்ந்து வருகிறோம் அதனால் அனைத்திலும் தொவியே அடைந்து வருகிறோம் அன்பு காதல் நட்பு அப்பா அம்மா சுற்றம் மக்கள்அரசியல் ஆன்மீகம் அணைத்தும் துன்பம் துயரம் அச்சம் பயம் நிறைந்ததாகவே உள்ளது இதற்கு என்ன காரணம் .

உண்மைக்கு புறம்பான பேசாத தெய்வங்களும் ,அதனை மக்களுக்கு அறிமுகப் படுத்திய, வழிகாட்டிய பொய்யான கற்பனை கதைகளானஆன்மீக நூல்க்களும்தான் என்பதை நாம் அறியாமல் இருந்தாலும்,இந்த உலகத்தை உண்டாக்கிய,உருவாக்கிய அருட்பெரும்ஜோதி என்னும் இயற்கை உண்மையான கடவுள் ஒரு மாபெரும் மாற்றத்தை 1874 ,ஆம் ஆண்டு ,திரு அருட் பிரகாச வள்ளலார் மூலமாகஅறிவித்து உள்ளார்

அந்த அறிவிப்பை அறிவின் மூலமாக சிந்தியுங்கள்!

இனிமேல் எல்லா உலகத்தும் சமரச சுத்த சன்மார்க்கம் ஒன்றே வழங்கும் .இதற்கு எவ்விதப் பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க உண்மை நெறியான பெருநெறி விரைவில் வழங்கும் அதன் மென்மேலும் வழங்கும்

பலவகைப் பட்ட மத பேதங்களும் .சமய பேதங்களும் சாத்திரப் பேதங்களும் ,சாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் .போய் சமரச சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் ஒன்றே விளங்கும் இது கடவுள் சம்மதம் .

இப்போது வருகிற நமது கடவுள் ,இதற்கு முன் சமய மத சாத்திரங்களில் வந்த்தாகச சொல்லுகின்ற பல வகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுள்,தேவர்,அடியார்,யோகி ,ஞானி,முதலானவர்களில் ஒருவரும் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லா தேவர்களும் ,எல்லா கடவுள்களும் .எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் .எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் இருந்து ஒரு சிறிய அருளைப் பெற்று வாழ்ந்தவர்களாகும்.அவர்களை உண்மையான கடவுள்கள் என்று நம்பிக்கை வைத்து உலக மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறீர்கள் இனிமேலும் உங்களை அழிய விட மாட்டேன் என்று எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வெளியிட்டு உள்ளார் .

மேலே கண்ட அறிவிப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் வெளியிட்டு உள்ளார் .இப்போது நாம் வழிபட வேண்டிய உண்மைக கடவுள் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும் .அவர்தான் நேரடியாக உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து உண்மை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நாம் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் நேரடியாக கிடைக்கும் .

1874 ,ஆம் ஆண்டுக்கு பிறகு உலகம் எந்த எந்த மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் உண்மை விளங்கும்

ஆதலால் பேசாத பொய்யான உருவம் உள்ள பொம்மைக் கடவுள்களை வழிபடாமல் ,எல்லா உயிர்களிலும் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் உண்மை தெய்வமான அருட்பெரும்ஜோதியை வழிபாடு செய்யுங்கள் அதுவே மனித வாழ்க்கையின் முக்கிய கடமையும் கட்டாயமுமாகும் .

உண்மைக கடவுள் பற்றி ஒருபாடல் !

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட் சாறும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்த்த் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி யீந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தேயுய்வம் !

உண்மையை அறிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

No comments:

Post a Comment